|
குறள்
1221
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது
|
மு.வ உரை:
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!
|
சாலமன் பாப்பையா உரை:
பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.
|
கலைஞர் உரை:
நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!
|
Couplet
1221
Thou art not evening, but a spear that doth devour The souls of brides; farewell, thou evening hour
|
Explanation
Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women
|
Transliteration
Maalaiyo Allai Manandhaar Uyirunnum Velainee Vaazhi Pozhudhu
|
###
|
|
குறள்
1222
புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல் வன்கண்ண தோநின் துணை
|
மு.வ உரை:
மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?
|
சாலமன் பாப்பையா உரை:
பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?
|
கலைஞர் உரை:
மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?
|
Couplet
1222
Thine eye is sad; Hail, doubtful hour of eventide! Of cruel eye, as is my spouse, is too thy bride
|
Explanation
A long life to you, O dark evening! You are sightless Is your help-mate (also) as hard-hearted as mine
|
Transliteration
Punkannai Vaazhi Marulmaalai Emkelpol Vankanna Thonin Thunai
|
###
|
|
குறள்
1223
பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித் துன்பம் வளர வரும்
|
மு.வ உரை:
பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.
|
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.
|
கலைஞர் உரை:
பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது
|
Couplet
1223
With buds of chilly dew wan evening's shade enclose; My anguish buds space and all my sorrow grows
|
Explanation
The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow
|
Transliteration
Paniarumpip Paidhalkol Maalai Thuniarumpith Thunpam Valara Varum
|
###
|
|
குறள்
1224
காதலர் இல்வழி மாலை கொலைக்களத் தேதிலர் போல வரும்
|
மு.வ உரை:
காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.
|
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.
|
கலைஞர் உரை:
காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது
|
Couplet
1224
When absent is my love, the evening hour descends, As when an alien host to field of battle wends
|
Explanation
In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter
|
Transliteration
Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu Edhilar Pola Varum
|
###
|
|
குறள்
1225
காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை
|
மு.வ உரை:
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?
|
சாலமன் பாப்பையா உரை:
காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?
|
கலைஞர் உரை:
மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் ``காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?'' என்று புலம்புகிறது
|
Couplet
1225
O morn, how have I won thy grace? thou bring'st relief O eve, why art thou foe! thou dost renew my grief
|
Explanation
O eve, why art thou foe! thou dost renew my grief
|
Transliteration
Kaalaikkuch Cheydhanandru Enkol Evankolyaan Maalaikkuch Cheydha Pakai?
|
###
|
|
குறள்
1226
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன்
|
மு.வ உரை:
மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.
|
சாலமன் பாப்பையா உரை:
முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.
|
கலைஞர் உரை:
மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை
|
Couplet
1226
The pangs that evening brings I never knew, Till he, my wedded spouse, from me withdrew
|
Explanation
Previous to my husband's departure, I know not the painful nature of evening
|
Transliteration
Maalainoi Seydhal Manandhaar Akalaadha Kaalai Arindha Thilen
|
###
|
|
குறள்
1227
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய்
|
மு.வ உரை:
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
|
சாலமன் பாப்பையா உரை:
காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.
|
கலைஞர் உரை:
காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்
|
Couplet
1227
My grief at morn a bud, all day an opening flower, Full-blown expands in evening hour
|
Explanation
This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening
|
Transliteration
Kaalai Arumpip Pakalellaam Podhaaki Maalai Malarumin Noi
|
###
|
|
குறள்
1228
அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை
|
மு.வ உரை:
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும் மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாகவும் வருகின்றது.
|
சாலமன் பாப்பையா உரை:
முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.
|
கலைஞர் உரை:
காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது
|
Couplet
1228
The shepherd's pipe is like a murderous weapon, to my ear, For it proclaims the hour of ev'ning's fiery anguish near
|
Explanation
The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me)
|
Transliteration
Azhalpolum Maalaikkuth Thoodhaaki Aayan Kuzhalpolum Kollum Patai
|
###
|
|
குறள்
1229
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து
|
மு.வ உரை:
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.
|
சாலமன் பாப்பையா உரை:
இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.
|
கலைஞர் உரை:
என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது
|
Couplet
1229
If evening's shades, that darken all my soul, extend; From this afflicted town will would of grief ascend
|
Explanation
When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow
|
Transliteration
Padhimaruntu Paidhal Uzhakkum Madhimaruntu Maalai Patardharum Pozhdhu
|
###
|
|
குறள்
1230
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயுமென் மாயா உயிர்
|
மு.வ உரை:
( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.
|
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.
|
கலைஞர் உரை:
பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது
|
Couplet
1230
This darkening eve, my darkling soul must perish utterly; Remembering him who seeks for wealth, but seeks not me
|
Explanation
My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth
|
Transliteration
Porulmaalai Yaalarai Ulli Marulmaalai Maayumen Maayaa Uyir
|
###
|
|