|
குறள்
1301
புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது
|
மு.வ உரை:
( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.
|
சாலமன் பாப்பையா உரை:
நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.
|
கலைஞர் உரை:
ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக
|
Couplet
1301
Be still reserved, decline his profferred love; A little while his sore distress we 'll prove
|
Explanation
Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not
|
Transliteration
Pullaa Thiraaap Pulaththai Avar Urum Allalnoi Kaankam Siridhu
|
###
|
|
குறள்
1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்
|
மு.வ உரை:
உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.
|
சாலமன் பாப்பையா உரை:
உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும்.
|
கலைஞர் உரை:
ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும் அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்
|
Couplet
1302
A cool reserve is like the salt that seasons well the mess, Too long maintained, 'tis like the salt's excess
|
Explanation
A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much
|
Transliteration
Uppamain Thatraal Pulavi Adhusiridhu Mikkatraal Neela Vital
|
###
|
|
குறள்
1303
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்
|
மு.வ உரை:
தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.
|
சாலமன் பாப்பையா உரை:
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்.
|
கலைஞர் உரை:
ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்
|
Couplet
1303
'Tis heaping griefs on those whose hearts are grieved; To leave the grieving one without a fond embrace
|
Explanation
For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony
|
Transliteration
Alandhaarai Allalnoi Seydhatraal Thammaip Pulandhaaraip Pullaa Vital
|
###
|
|
குறள்
1304
ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று
|
மு.வ உரை:
பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.
|
சாலமன் பாப்பையா உரை:
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.
|
கலைஞர் உரை:
ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்
|
Couplet
1304
To use no kind conciliating art when lover grieves, Is cutting out the root of tender winding plant that droops
|
Explanation
Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root
|
Transliteration
Ooti Yavarai Unaraamai Vaatiya Valli Mudhalarin Thatru
|
###
|
|
குறள்
1305
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை பூவன்ன கண்ணார் அகத்து
|
மு.வ உரை:
நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.
|
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.
|
கலைஞர் உரை:
மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்
|
Couplet
1305
Even to men of good and worthy mind, the petulance Of wives with flowery eyes lacks not a lovely grace
|
Explanation
An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands
|
Transliteration
Nalaththakai Nallavarkku Eer Pulaththakai Pooanna Kannaar Akaththu
|
###
|
|
குறள்
1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று
|
மு.வ உரை:
பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.
|
சாலமன் பாப்பையா உரை:
வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.
|
கலைஞர் உரை:
பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்
|
Couplet
1306
Love without hatred is ripened fruit; Without some lesser strife, fruit immature
|
Explanation
Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit
|
Transliteration
Thuniyum Pulaviyum Illaayin Kaamam Kaniyum Karukkaayum Atru
|
###
|
|
குறள்
1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று
|
மு.வ உரை:
கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.
|
சாலமன் பாப்பையா உரை:
இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.
|
கலைஞர் உரை:
கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு
|
Couplet
1307
A lovers' quarrel brings its pain, when mind afraid Asks doubtful, 'Will reunion sweet be long delayed?'
|
Explanation
The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike
|
Transliteration
Ootalin Untaangor Thunpam Punarvadhu Neetuva Thandru Kol Endru
|
###
|
|
குறள்
1308
நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் காதலர் இல்லா வழி
|
மு.வ உரை:
நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?
|
சாலமன் பாப்பையா உரை:
இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?
|
கலைஞர் உரை:
நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?
|
Couplet
1308
What good can grieving do, when none who love Are there to know the grief thy soul endures
|
Explanation
What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?
|
Transliteration
Nodhal Evanmatru Nondhaarendru Aqdhariyum Kaadhalar Illaa Vazhi
|
###
|
|
குறள்
1309
நீரும் நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது
|
மு.வ உரை:
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.
|
சாலமன் பாப்பையா உரை:
நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.
|
கலைஞர் உரை:
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்
|
Couplet
1309
Water is pleasant in the cooling shade; So coolness for a time with those we love
|
Explanation
Like water in the shade, dislike is delicious only in those who love
|
Transliteration
Neerum Nizhaladhu Inidhe Pulaviyum Veezhunar Kanne Inidhu
|
###
|
|
குறள்
1310
ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம் கூடுவேம் என்ப தவா
|
மு.வ உரை:
ஊடல் கொண்டபோது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.
|
சாலமன் பாப்பையா உரை:
ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.
|
கலைஞர் உரை:
ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்
|
Couplet
1310
Of her who leaves me thus in variance languishing, To think within my heart with love is fond desire
|
Explanation
It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike
|
Transliteration
Ootal Unanga Vituvaarotu Ennenjam Kootuvem Enpadhu Avaa
|
###
|
|